ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

திங்கள், 23 நவம்பர், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய விழா!!



மனிதநேய மக்கள் கட்சியின் கோவை மாவட்டம் 37 38 வது வார்டுகளில் நடத்திய மாபெரும் மனிதநேய விழாஇறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 37 வது வார்டு கிளைசெயலாளர் சகோ.நியமத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


மாநில துணை பொதுச்செயலாளர் சகோ.தமீமுன் அன்சாரி அவர்களும் தமுமுக மாநில செயலாளர் சகோ.கோவை.சாதிக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தின்னர்.இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகஇஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ம.ம.கசார்பாக பல்வேறு தொழிற்ச்சங்கங்களும் தமீமுன் அன்சாரியால் துவங்கிவைக்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு சகோ. எ.கே.சுல்தான் அமீர் ம.ம.க மாவட்ட செயலாளர்
கோவை சகோ. அப்துல் பஷிர்மாவட்ட தலைவர் த மு மு கசகோ . ஆர் . எம். ரபிக்கோவை மாவட்ட செயலாளர் த மு மு கசகோ . டி. எம். எஸ். அப்பாஸ்கோவை மாவட்ட பொருளாளர் ம.ம.க
சகோ . அப்பாஸ்கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சிசகோ . ஹாலித்திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி முன்னிலை வகித்தனர்.



இறுதியாக மனித நேய மக்கள் கட்சி யின் 38வது வார்டு கிளை செயலாளர் சகோ.அப்துல் ஹமீது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவுற்றது.














செவ்வாய், 10 நவம்பர், 2009

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்



கடந்த 07.11.2009 தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லை பெரியர் அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதில் ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் கே. முஹம்மது கௌஸ், கொள்கை விளக்க பேச்சாளர் மதுரை மைதீன், தேனீ மாவட்டச் செயலாளர் சாதிக், தமுமுக மாவட்டத் தலைவர் அஜ்மீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திங்கள், 9 நவம்பர், 2009

இந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள்


மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.
இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.
இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.
ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், அமைச்சர் அஜீத் பவாரும் படாதபாடுபட்டனர்.
மீண்டும் அவை கூடியதும் தாக்குதல் நடத்திய 4 ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு:
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் அசோக் சவான் வசம் பொது நிர்வாகம், ஊரக வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவை இருக்கும்.
தேசிவாத காங்கிரஸைச் சேர்ந்த துணை முதல்வர் சகன் பூஜ்பலுக்கு பொதுப்பணித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.பட்டீலுக்கு உள்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் இந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். தாக்குதலையடுத்து அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மீண்டும் அவருக்கு அதே உள்துறை வழங்கப்பட்டுள்ளது. இதை தேசியவாத காங்கிரஸ் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட நாராயணன் ரானேவுக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் சரத்பவாரின் சகோதரி மகனுமான அஜித் பவாருக்கு மின்துறை வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர தேர்தலில் வென்ற காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கலால் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.
இறுதியாக காங்கிரசுக்கு 23 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரச்சனை தாற்காலிகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
--தட்ஸ்தமிழ்--

ஞாயிறு, 8 நவம்பர், 2009

புதுவையில் அரசு பொது மருத்துவமனையின் அவலநிலையைக் கண்டித்து ம.ம.க ஆர்ப்பாட்டம்



காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை. பல்வேறு துறைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் கிடையாது. ஊழியர்களும் மருந்துகளும் கிடையாது. ஸ்கேன் எக்ஸ்ரே போன்ற நிரந்தர தொழில் நுட்ப வல்லுநர்கள் கிடையாது. விபத்து போன்ற அவசர சிகிக்சைக்கு தஞ்சாவூர் செல்ல வேண்டிய அவலநிலை. இத்தகைய அவலங்களை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நகர செயலாளர் அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது. ம.ம.க மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜா முகையதீன், அம்புரோஸ் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ம.ம.க மாவட்டச் செயலாளர் ­யாக்கத் அலி­, தமுமுக மா.செயலாளர் அப்துல் ரஹீம், தமுமுக மா.பொருளாளர் ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதிய அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தாங்க­ல் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம்



மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் திருவொற்றியூர், தாங்க­ல் நேற்று நடந்தது. கதிர்உசைன் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாநில மாணவர் அணி செயலர் ஜெயினுல் ஆப்தீன் பேசினார்.
கட்சியின் கொள்கைகளை விளக்கி தலைமை கழகப் பேச்சாளர் கோவை செய்யது பேசியதாவது:மனிதநேய மக்கள் கட்சி, ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் தேர்த­லில் போட்டியிடவில்லை. அரசிய­ல் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் எடுத்து செல்லவே, தேர்தலில் களமிறங்கினோம். மக்கள், 69 ஆயிரம் ஓட்டுகளை அள்ளித் தந்தனர். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தான் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.மனிதகுலத்தின் எதிரிகள் நிறையவே உள்ளனர். பயங்கரவாதம் வளர்ந்துக் கொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. மாற்று அரசியலை உருவாக்கும் மகத்தான கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. நிச்சயம் அரசிய­ல் மிகப் பெரிய மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கும். இவ்வாறு சையது பேசினார்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் உசைன்அ­லி, அப்துல்சமது, சலீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சனி, 7 நவம்பர், 2009

கொட்டும் மழையில் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்



இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்;பிலும் 10 சதவீதம் தனிஇடஓதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியும், கச்சத்தீவை மீட்டு தர கோரியும் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் மண்டபத்தில் 6-11-2009 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது



இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் அவர்கள் தலைமை ஏற்றார். மனிதநேய மாநில துனைபொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள். த.மு.மு.க மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தஸ்பிக்அலி, பொருளாலர் சித்திக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கொட்டும் மழையையும் பொறுப்படுத்தாமல் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

புதன், 4 நவம்பர், 2009


பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு - ப. சிதம்பரம்


பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு என்றும் இது திட்டமிட்டே செய்த சதி என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சிறுபாண்மை மக்களை பாதுகாப்பது பெரும்பாண்மை மக்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
உத்திரப் பிரதேச மாநிலம் தியோபந்த் என்ற இடத்தில் ஜமாத்தே உலமா இ இந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் 30 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம், பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு என்று திட்டமிட்டே செய்யப்பட்ட சதி என்றும் கூறினார்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறையை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். சமூக அமைதியைக் கெடுக்கும் அனைத்து முயற்சிகளும் கண்டிக்கப்பட வேண்டியவையே. சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டுபவர்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு எதிராக வெளியிட்ட பத்வாவைப் பாராட்டிய சிதம்பரம், அந்த பத்வாவை முஸ்லிம்கள் மட்டுமல்லாது சரியான சிந்தனையில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்