ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

புதன், 28 ஏப்ரல், 2010

திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்டம் திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 15.04.2010 அன்று அம்பேத்கார் சிந்தனைகளும், ஒடுக்கப்பட்டோரின் அரசியலும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, ம.ம.க உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமுமுக பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்திற்கு திருபனந்தால் ஒன்றிய தமுமுக செயலாளர் ஏ. அப்துல் நாசீர் தலைமை தலைமை தாங்கினர்.


ம.ம.க மாவட்ட நிர்வாகிகள், சம்சுதீன், உமர் ஜஹாங்கீர், பீ. ராஜ் முகம்மது, சரணவன். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் முகம்மது செல்லப்பா, மௌலவி. நஜிமுதீன் வாஹிதீன், சல்லி நசீர், ம.ம.க ஒன்றியச் செயலாளர் ஹைதர் அலி, திருபன்தால் நகரச் செயலாளர் கஜினி முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக